பீகாரில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

பீகார் மாநிலத்தில் பெட்டியா பேருந்து நிலையத்தில் சிறுமி ஒருவர் பாட்னா செல்ல நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த கண்டக்டரும், டிரைவரும் அந்த சிறுமியை பாட்னாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பேருந்தில் ஏற்றியுள்ளனர். பின்னர் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

குளிர்பானத்தை நம்பி குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். பைபாஸ் சாலையில் ஓடும் பேருந்தில் வைத்து ஓட்டுநர், நடத்துனர் மேலும் ஒருவர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் கூக்குரல் கேட்டு மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பேருந்தில் ஆய்வு செய்தனர்.

bihar

அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி அரை மயக்க நிலையில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர், உதவியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாகவுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஓட்டுநரும், அவனது உதவியாளரும் தனக்கு மாத்திரை அடங்கிய குளிர்பானம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

rape

ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு கூட்டுப் பலாத்கார வழக்கில், புதுடெல்லியில் 23 வயது பிசியோதெரபி மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.