மதுபோதையில் நடந்த தகராறு.. 900க்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

900 பணத்திற்காக இளைஞர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்க சுவாமி கோவில் பின்புறம் உள்ள கோயில் ஊழியர் குடியிருப்பில் பணகுடி யாதவர் தெருவைச் சேர்ந்த பசுபதி சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. இந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பசுமதியை பணகுடியைச் சேர்ந்த கணேசன் (58) என்பவர் அழைத்து செல்வது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

பசுபதியும் கணேசனும் ஒன்றாக மது அருந்தியதாகவும், பின்பு பசுமதி கணேசனிடமிருந்து 900 ரூபாயை திருடி விட்டதாகவும் அதனை பலமுறை கேட்டும் தராததால் ஆத்திரத்தில் அவனை குடிக்க அழைத்து சென்று துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.