மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ.. பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட மக்கள்.. தீயை அணைக்கும் பணி தீவிரம்.!

ஸ்பெயின் Pujerra மலைப் பகுதியில் தீப்பற்றி எரியும் நிலையில் மலையடிவார நகரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

மலைக் காடுகளில் பற்றி எரியும் தீயில் கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

தீயின் தீவிரம் அதிகம் காணப்படும் நிலையில் மலையடிவாரத்தில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

தேவையான பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மக்கள் பத்திரப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 140 வீரர்கள், 15 விமானங்கள் மற்றும் ஸ்பெயின் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.