மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேவையுடையோருக்கான தடகளப் போட்டி நேற்று (08) பதுளை வில்சன் டயஸ் விளையாட்டரங்கில் பதுளை மாவட்ட மேலதிக செயலாளர் கே.பி.ஏ.எம்.எஸ்.அபேகோன் தலைமையில் இடம்பெற்றது.

ஆகஸ்ட் 2022 இல் நடைபெறவுள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு இணையாக விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்க மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில், முதலிடத்தைப் பிடிக்கும் விளையாட்டு வீரர்கள் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெறுவார்கள்.

பதுளை மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு.ஆதித் சேரசிங்க இந்நிகழ்வை ஒருங்கிணைத்ததுடன், பதுளை மாவட்ட செயலகத்தின் விளையாட்டுப் பிரிவு மற்றும் கள உத்தியோகத்தர்கள் நடுவர்களாகச் செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.