கராச்சி:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலியாவில் இருந்து, சோப் நகருக்கு, ஒரு வேன்சென்று கொண்டிருந்தது. அக்தர் சாய் மலைப்பகுதியில், ஒரு வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட, 22 பேர் இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரேயொரு குழந்தை மட்டும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. விபத்து பற்றி போலீசார் கூறுகையில், ‘அக்தர் சாய் மலை உச்சியில் இருந்து, வேன் மிகவும் ஆழமான பள்ளத்தில் விழுந்து உள்ளது. இதனால், மீட்பு பணிகள் மேற்கொள்ள மிகவும் கடினமாக உள்ளது’ என்றனர். அக்தர் சாய் மலை, கடல் மட்டத்திலிருந்து, ௫,௧௫௭ அடி உயரத்தில் அமைந்துள்ள, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
கராச்சி:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலியாவில் இருந்து, சோப் நகருக்கு, ஒரு வேன்சென்று கொண்டிருந்தது. அக்தர் சாய் மலைப்பகுதியில், ஒரு வளைவில் திரும்பும் போது,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.