13-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு.!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வருகின்ற 13 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும்  பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், வருகின்ற 13ம் தேதி பள்ளி திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியரும் கடைபிடிக்கவேண்டும். பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம்  தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது. பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.