#Breaking : தமிழ்நாட்டில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை.!

தமிழகத்தில் சென்னை மயிலாடுதுறை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி என்ஐஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஆதாரங்களை திரட்டும் பொருட்டு சென்னையில் 4 இடங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் 9 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு சிலர் ஆதரவாக நிதி திரட்டியது தொடர்பான வழக்கு டெல்லியில் விசாரணையில் உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியது தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த சாதிக் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.