அமெரிக்காவில் தொழிற்சாலையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி

அமெரிக்கா மேரிலேண்ட் தொழிற்சாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

ஸ்மித்ஸ்பர்க் நகரில் உள்ள தொழிற்சாலையில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தன துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டடி பட்டு உயிரிழந்தனர்.

சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மர்ம நபரை விரட்டிச் சென்று போலீஸ் துப்பாக்கி பிரிவு வீரர் நடத்திய சூட்டில் அவர் படுகாயங்களுடன் பிடிபட்டார். எதற்காக துப்பாக்கிச் சூடு நடந்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.