சபரிமலை: பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலையில் லட்சார்ச்சனை, சிறப்பு களபாபிஷேகம் நடந்தன. பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தினார். வழக்கமான பூஜைகள் தொடங்கின. சன்னதி முன்புறம் மண்டபத்தில் லட்சார்ச்சனை நடைபெற்றது. தந்திரி, மேல்சாந்தி தலைமையில் பூஜாரிகள் கலந்து கொண்டனர்.
மதியம் உச்சபூஜைக்கு முன் களபம் பூஜிக்கப்பட்டு பவனியாக எடுத்து வரப்பட்டு அபிேஷகம் செய்யப்பட்டது. இரவு 7:00 மணிக்கு படி பூஜை, 9:00 மணிக்கு அத்தாழ பூஜை நடத்தப்பட்டு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
சபரிமலை: பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலையில் லட்சார்ச்சனை, சிறப்பு களபாபிஷேகம் நடந்தன. பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.