சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஒகேனக்கல்லில் மீண்டும் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி.!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்துள்ளது.

இதனிடையே கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக, ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க (07.06.2022) முதல் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை  பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது  என ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ஒகேனக்கல் அருவியில் குளித்து, பரிசலில் பயணம் செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.