சென்னை: தமிழ்நாடு முழுவதும் புதிதாக கட்டப்பட்டுள்ள 2,707 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் ரூ.270.15 கோடியில் 9 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. அதன்படி, சுமார் 2,707 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, கோவை, திருச்சி, அரியலூர் உள்பட பல இடங்களில் கட்டப்பட்ட ரூ.270.5 கோடி மதிப்பிலான குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும் தாமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை 23,826 பயனாளிகளுக்கு ஸ்டாலின் வழங்கினார். அதோடு 4,880 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையும், 938 பேருக்கு கிரயப் பத்திரங்களையும் ஸ்டாலின் வழங்கினார்.