சென்னை: தமிழ்நாட்டில் 2023-க்குள் 261 கோடி மரங்களை நட வனத்துறை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இதனை தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் 2.5 கோடி மரக்கன்றுகள் நடப்படும், அதற்கான நாற்றுகள் அக்டோபருக்குள் தயார் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.