பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த புலம்பெயர்ந்தோர் விடுவிக்கப்படலாம்: உள்துறை அலுவலகத்துக்குப் பின்னடைவு


பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப்பட இருந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் விடுவிக்கப்படும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக, அல்லது அச்சுறுத்தும் ஒரு முயற்சியாக என்று கூட கூறலாம். அப்படி பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்காக பெரும் செலவில் அந்நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.

ஆனால், அவர் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எடுக்கும் முயற்சிகளுக்கு, சமூக ஆர்வலர்களும் வலதுசாரிக் குழுக்களும் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளார்கள்.
அவ்வகையில், வரும் செவ்வாய்க்கிழமை புலம்பெயர்ந்தோர் சிலரை நாடுகடத்த உள்துறைச் செயலகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், அதற்கு முட்டுக்கட்டையிடும் வகையில் புலம்பெயர்ந்தோர் ஆதரவு சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.

அவர்கள் புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் திட்டம் குறித்த மீளாய்வைக் கோரியுள்ளார்கள்.
அவர்கள் திட்டம் வெற்றிபெறும் நிலையில், அதாவது அவர்கள் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் நிலையில், அந்த புலம்பெயர்ந்தோர் விடுவிக்கப்படும் நிலை உருவாக வாய்ப்புள்ளது.
அவர்கள் உடலில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்புக் கருவிகளுடன் மீண்டும் பிரித்தானியாவில் நடமாடும் ஒரு நிலை உருவாகியுள்ளதால், எப்படியாவது அவர்களை நாடுகடத்திவிடவேண்டும் என்று திட்டமிட்டிருந்த உள்துறைச் செயலகத்துக்கு அது பெரும் பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது.

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த புலம்பெயர்ந்தோர் விடுவிக்கப்படலாம்: உள்துறை அலுவலகத்துக்குப் பின்னடைவு

Photo Credit: PA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.