வண்டலூர்.! இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன்(34) என்பவர், வண்டலூர் வெளிவட்டசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.