தஞ்சாவூர் : இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்.. நடுரோட்டில் சாமி சிலை வைத்து சாலை மறியல்.!

திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் சாமி சிலையை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகிரி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவாக நடக்கும் முக்கிய விழாவின்போது சுவாமி வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக வந்தது. 

அப்போது பல்லக்கு தூக்கி வந்த இரு தரப்பினரிடையே தகராறு மோதலாக மாறியது. இதனையடுத்து சாமியை நடுரோட்டில் இறக்கி வைத்துவிட்டு கற்களாலும், மூங்கிலாலும் தாக்கிக் கொண்டனர்.

இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய பின் சாமியை முக்கிய வீதி வழியாக வந்து கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.