பத்திரிகை கவுன்சில் தலைவர் தேர்வு| Dinamalar

புதுடில்லி : இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரமவுலி குமார் பிரசாத் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவடைந்தது. இதையடுத்து அந்தப் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, இந்தியப் பத்திரிகை கவுன்சில் உறுப்பினர் பிரகாஷ் துபே ஆகியோர் அடங்கிய கமிட்டியின் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், இந்தியப் பத்திரிகை கவுன்சில் தலைவராக, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரஞ்சனா பிரகாஷ் தேசாய்,72, தேர்வு செய்யப்பட்டார். கவுன்சில் உறுப்பினர்களும் விரைவில் நியமிக்கப்படுவர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.