இலங்கைக்கு கடன் அளிக்குது அமெரிக்கா| Dinamalar

கொழும்பு:இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, 924 கோடி ரூபாய் கடன் உதவி திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நம் அண்டை நாடான இலங்கைக்கு பல்வேறு கடன் உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது. இந்த வகையில், பாதிக்கப்பட்டு உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக, 924 கோடி ரூபாய் கடன் உதவி தொகையை அமெரிக்கா அறிவித்து உள்ளது.
அந்நாட்டை சேர்ந்த சர்வதேச நிதி மேம்பாட்டு கழகம் இந்த கடன் தொகையை அளிக்க உள்ளது. இலங்கைக்கான அமெரிக்க துாதர் ஜூலி சங் இந்த தகவலை உறுதி செய்தார். சரியான நேரத்தில் உதவிடும் அமெரிக்காவுக்கு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.