ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்தனர்

பாலக்காடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்ததில், மகன் பலியானார். -கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சவளவரா என்ற பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 75. மனைவி பங்கஜா ஷி, 70. இவரது மகன் தனியார் பள்ளி ஆசிரியர் பினுகுமார் 42. நேற்று காலை மூவரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பங்கஜாஷியின் சகோதரியின் மகள், இதை பார்த்து கூச்சலிட்டார்.

அப்பகுதி மக்கள் ஓடிவந்து , விஷம்குடித்த மூவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.ஆனால், செல்லும் வழியில் பினுகுமார் உயிரிழந்தார். தாய், -தந்தையினர் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இவர்கள், தற்கொலை முயற்சிக்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.