கணவனை நிர்வாணமாக்கி ஊர்வலம்: மனைவி கைது| Dinamalar

ராய்பூர் : சத்தீஸ்கரில் கணவரையும், அவரது காதலியையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய மனைவி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரின் கொண்டாகன் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கணவரை வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பார்த்த ஆத்திரத்தில், மனைவி கிராம சபையை கூட்டியுள்ளார். அதில், இருவரையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்துவது என, முடிவானது. இதையடுத்து கணவரையும், அந்த பெண்ணையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், கணவரை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய மனைவி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.