'டீ குடிப்பதை கம்மி பண்ணுங்க' – அமைச்சர் திடீர் அட்வைஸ்!

தேயிலையை கடன் வாங்கி இறக்குமதி செய்து வருவதால், டீ குடிப்பதை நாட்டு மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என, பாகிஸ்தான் திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை நாட்டைத் தொடர்ந்து, அண்டை நாடான பாகிஸ்தானில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே, பெட்ரோல், டீசலுக்கு பாகிஸ்தான் அரசு மானியம் வழங்கி வருகிறது.

இதற்கிடையே, பொருளாதார விவகாரத்தில் கடுமையான முடிவுகளை எடுக்காவிட்டால் பாகிஸ்தானின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதார நிலையைப் போன்றே இருக்கும் என நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடும் நிதி நெருக்கடி: தெற்கு சூடானுக்கு உணவு நிவாரணம் நிறுத்தம்!

இந்நிலையில் இன்று, பாகிஸ்தான் திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால் கூறியதாவது:

பாகிஸ்தான் கடுமையான பொருளதார நெருக்கடியில் உள்ளது. உலகிலேயே அதிகளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடான பாகிஸ்தான், தற்போதைய சூழ்நிலையில், கடன் வாங்கி தேயிலையை இறக்குமதி செய்து வருகிறது. தேயிலையை கடன் வாங்கி இறக்குமதி செய்து வருவதால், தினமும் 1 – 2 கப் வரை மட்டுமே நாட்டு மக்கள் டீ குடிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். இது பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி கட்டணத்தை குறைக்க உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளும்படி அமைச்சர் அஹ்சன் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.