தொலைநோக்கி கருவியில் வந்த மர்ம சிக்னல்கள்… ஏலியன்கள் அனுப்பியதாக இருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை!

சீனாவின் அதிநவீன, ஸ்கை ஐ எனப்படும் தொலைநோக்கி கருவியில் அண்மையில் பதிவான ரேடியோ அலைகள் ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் குய்சோவ் மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது. மிகச்சிறிய ரேடியோ அலைகளைகூட துல்லியமாக பதிவுச்செய்யும் உணர்திறன் கொண்டது இந்த 1640 அடி உயரம் கொண்ட தோலைநோக்கி.

அண்மையில் இந்த தொலைநோக்கியில் பதிவான மின்காந்த அலைகள் பூமிக்கு அப்பால் வாழும் ஏலியன்கள் அனுப்பியதாக இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் திடமாக நம்புகின்றனர். இது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.