பிரிட்டன் மீது சட்ட நடவடிக்கைஐரோப்பிய யூனியன் அறிவிப்பு| Dinamalar

பிரசல்ஸ்:’பிரெக்சிட்’ ஒப்பந்தத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மாற்றம் செய்யவுள்ள பிரிட்டனின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக பிரெக்சிட் ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கையெழுத்தானது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்து நாட்டுக்கு செல்லும் சில பொருட்களுக்கான சுங்க சோதனையை விலக்குவது குறித்து மசோதா நிறைவேற்ற பிரிட்டன் முடிவு செய்துள்ளது.

இது பிரெக்சிட் ஒப்பந்தத்தை மீறும் செயல் என, ஐரோப்பிய யூனியன் குற்றஞ்சாட்டி உள்ளது.இந்த விவகாரத்தில் பிரிட்டனின் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.