பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடா?-மத்திய அரசு விளக்கம்!

கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருட்களை நிரப்புவதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல் நாடு முழுவதும் காட்டு தீ போல் வேகமாக பரவிவரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ நாட்டில் பெட்ரோல், டீசல் உற்பத்தி தேவைக்கு அதிகமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் குவிந்து வருவதால் எரிபொருட்கள் நிரப்புவதில் தாதமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் அதிகமாகிறது. இது, எண்ணெய் நிறுவனங்களின் விநியோக கட்டுப்பாடுகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அதேசம.யம்,, உள்ளூர் மட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு எரிபொருட்களின் தேவை அதிகரித்திருப்பது சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது. . சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசலின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த மாதத்தின் முதல் பாதியில் எரிபொருட்களின் தேவை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேவை அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைகளை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.