இத்தாலியில் திருமணநாளை கொண்டாடிய ராம் சரண்

தெலுங்கில் உட்ச நச்சத்திரமாக திகழும் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோருக்கு 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நேற்று தங்களது பத்தாவது திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர் . அதற்காக இருவரும் இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் இருவரும் திருமண நாளில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு ரசிகர்களும் , சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . ஆர்ஆர்ஆர் வெற்றியை அடுத்து ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.