ஈரோடு.! ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.!

ஈரோடு மாவட்டத்தில் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 23). இவர் சிறிய வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் இறந்து விட்டதால், அவரது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இதையடுத்து சகோதரிக்கு திருமணமாகி குழந்தை இல்லை என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சகோதரி உயிரிழந்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்து மனவேதனையில் இருந்த குமார் நேற்று இரவு சூளை அருகே உள்ள குரங்கன்பள்ளம் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கம்பியில் சிக்கி கொண்டுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும், வீரப்பன்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.