தலைமைச் செயலாளர்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் முதல் தேசிய மாநாடு இன்று தொடங்குகிறது.

இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது . இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும் விதமாக இம்மாநாடு நடைபெறுகிறது.

மாநிலங்களுடன் ஒன்றிணைந்து விரைவான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படும். இந்த மாநாட்டில், தேசிய கல்விக் கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் விவசாய விளைப்பொருட்களில் தன்னிறைவு அடைதல் ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.

அத்துடன் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடு என்ன என்பது குறித்து மாநாட்டில் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் நிர்வாக செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.