நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு.!

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜனவரி 1ஆம் தேதி முதல் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 28 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் 22 ஆயிரத்து 510 பேர் பயனடைவார்கள் என்றும், ஆண்டிற்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினமாகும் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.