போயிங் நிறுவனத்திடம் இருந்து முதல் 737 மேக்ஸ் ரக விமானத்தை பெற்றது ஆகாசா ஏர் நிறுவனம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம் போயிங் நிறுவனத்திடம் இருந்து முதல் 737 மேக்ஸ் ரக விமானத்தைப் பெற்றுள்ளது.

பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தொடங்கியுள்ள ஆகாசா ஏர் நிறுவனம் வர்த்தக ரீதியில் விமானங்களை இயக்க கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் மொத்தம் 72 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்க ஆகாசா ஏர் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அதன்படி தற்போது முதல் விமானம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் 18 விமானங்களை ஒப்படைக்கவும், எஞ்சிய 54 விமானங்கள் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் வழங்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.