முதல்வர், அமைச்சர் மீது கொடுத்த வாக்குமூலத்தை திரும்ப பெற மாட்டேன்! ஸ்வப்னா சுரேஷ் உறுதி…

சென்னை: கேரள தங்கக்கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள முன்னாள் அமைச்சர் மீது கொடுத்த வாக்குமூலத்தை திரும்ப பெற மாட்டேன் என உறுதி கூறியுள்ளார்.

கேரளா தங்க கடத்தல் வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ள ஸ்வப்னா, கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி, மகள் ஆகியோ ருக்கும் தங்கம், டாலர் நோட்டுகள் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உண்டு என்றும், கேரள அமைச்சர் ஜலீலுக்கும் தொடர்பு உண்டு என்றும்  நீதிமன்றத்தில்  என ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில், அரபு நாட்டில் மகளின் ஐ.டி.கம்பெனியை தொடங்க பினராயி விஜயன் விரும்பினார் என்றும், அதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார் என்று கூறியதுடன், இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார். ஆனால், இத்திட்டத்திற்கு ஷார்ஜா அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இத்திட்டம் நிறைவேறவில்லை என ஸ்வப்னா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.  இதையடுத்து, ஸ்வப்னா சுரேசுக்கு மிரட்டல் வந்தது. அதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. முதல்வர் உள்ளிட்ட பலர் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். ஆனாலும் எந்த காரணம் கொண்டும் என் வாக்குமூலத்தை திரும்ப பெறமாட்டேன் என்று ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியினரின் போராட்டமும் தீவிரம் அடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.