சென்னை- வடமாநில ரயில்கள் ரத்து; ரயில்வே அதிரடி;பயணிகள் அதிர்ச்சி!

மத்திய அரசின் அக்னிபாத் என்கிற புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாக, வட இந்தியாவில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ரயில்கள் தீக்கு இரையாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பல்வேறு ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போராட்டம் தென்னிந்தியாவுக்கும் பரவியதை அடுத்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தினால் 200 ரயில் சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. மேலும் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் கருத்து செல்லாது; பாஜக திடீர் பல்டி!

அதேபோல் 13 ரயில் சேவைகள் இடையே நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீஹார், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் எதிரொலியாக, சென்னையில் இருந்து பீஹார், கிழக்கு உ.பி., செல்லும் அனைத்து ரயில்களுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனால், இந்த வழித்தடங்களில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகள் மற்றும் பதிவு செய்யாமல் பயணத்துக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.