டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து..ஆறு போல் ஓடிய எரிசாராயம்..!

எரிசாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் எரிசாராயம் ஏற்றிகொண்டு காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள மதுபான ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அதில், ஒரு லாரி செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது.

அதில் டேங்கரில் உள்ள எரிசாராயம் ஆறு போல ஓடியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், கிரேன் மூலம் டேங்கர் லாரியை மீட்டு மதுபான ஆலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படட்து.அ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.