அக்னிபத் குறித்து புரிதல் இல்லை: கடற்படை தளபதி விளக்கம்| Dinamalar

புது டில்லி: ”ராணுவ வேலைவாய்ப்பு திட்டமான, ‘அக்னிபத்’ குறித்து தவறான புரிதல் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் அதை எதிர்த்து இளைஞர்கள் போராடுகின்றனர்,” என, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் தெரிவித்தார்.

இது குறித்து கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் வெளியிட்டுள்ள, ‘வீடியோ’வில் அவர் கூறியிருப்பதாவது: ‘அக்னிபத்’ ராணுவ வேலைவாய்ப்பு உருவாக்க திட்டக்குழுவில் நானும் அங்கம் வகித்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த திட்டத்தை வடிவமைத்தோம். இது, ராணுவத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

இத்திட்டத்தினால் நாடு பலன் அடையும். இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உருவாகும். திட்டம் குறித்து சரியான புரிதல் இல்லாததாலும், தவறான தகவல்கள் பரப்பப்படுவதாலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தில் பணியாற்ற முன்பு ஒருவருக்கு கிடைத்த வாய்ப்பு, இத்திட்டத்தால் நான்கு பேருக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.