அதிமுகவில் வலுத்துவரும் ஒற்றை தலைமை கோரிக்கை ; ஓ.பன்னீர் செல்வத்திற்கு 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு

கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக அதிமுகவில் பெரும் பிரச்சனையை கிளப்பி வரும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு 11 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையது கான், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் , கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், திருவள்ளுவர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் , திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுமணியம் பி. பலராமன் , திருச்சி மாநகர் மாவட்டசெயலாளர் வெல்லமண்டி என். நடராஜன் , தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை எஸ். ராஜேந்திரன்
ஆகிய 11 மாவட்டச் செயலாளர்கள் ஓ.பி.எஸ் க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் மொத்தமுள்ள 75 மாவட்ட செயலாளர்களில் ஓபிஎஸ் சுக்கு ஆதரவாக உள்ள 11 மாவட்ட செயலாளர்களை தவிர, எஞ்சியுள்ள 64 மாவட்ட செயலாளர்களும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.