ஆவடியில் மின்சார ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த ரயில்வே ஊழியர் உயிரிழப்பு.!

ஆவடியில் மின்சார ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கணேஷ் நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை எழும்பூர் ரயில்வேயில் சிக்னல் டிசைனராக பணி புரிந்து வந்தார்.

இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கமாக முத்துகிருஷ்ணன் வேலையை முடித்துவிட்டு ஆவடியில் இருந்து வேப்பம்பட்டு செல்வதற்காக அரக்கோணம் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலில் ஏற முயன்றபோது தவறி பிளாட்பாரத்தில் விழுந்துள்ளார்.

இதில் முத்துகிருஷ்ணன் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.