காத்திருந்தேன் : புதுமுகங்கள் உருவாக்கும் காதல் படம்

அமராவதி கிரியேஷன்ஸ் சார்பில் ராம்கோவிந்த் தயாரிக்கும் படம் காத்திருந்தேன். புதுமுகம் சுரேஷ் பாரதி இயக்கி நடிக்கிறார். அவருடன் இன்னொரு நாயகனாக இளங்கோவன் நடிக்கிறார். சுஷ்மிதா நாயகியாக நடிக்கிறார். ரா.முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.பி.விஜய் இசையமைக்கிறார்.

படம் குறித்து சுரேஷ் பாரதி கூறியதாவது: முறையான காதல், கள்ளக்காதல், நல்ல காதல், என காதலில் பலவகை உண்டு. முற்றிலும் மாறுபட்ட முழுவதும் வேறுபட்ட காதலை சொல்ல உள்ளேன். இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் சொல்லப்படாத காதல் கதை இது.

காதலிக்கும் இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்று இந்த சமுதாயம் நினைக்கிறது. சாதி, மதம், பணம், அரசியல் எதுவும் காரணம் இல்லை. வேறு எதற்காக இவர்கள் கேரக்கூடாது என்பதை சஸ்பென்சாக இதுவரை யாரும் சொல்லப்படாத புதிய பரிணாமத்தோடு சொல்வதற்கு திரைக்கதையை வடிவமைத்துள்ளேன். கோவை, சேலம், கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் படமாக்கிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.