குருத்வாரா மீது வெடிகுண்டு தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில், குருத்வாரா மீது நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலம் என அறியப்படும் குருத்வாரா அமைந்துள்ளது. இதில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. குருத்வாராவில், சீக்கிய பக்தர்கள் பலர் சிக்கி கொண்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், தாலிபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த பகுதியானது ஆப்கானிஸ்தான் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அதிக அளவில் கூடும் இடம் ஆகும். இந்த வெடிகுண்டு தாக்குதல்களில், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் நபி தக்கவுர் கூறும்போது, கொல்லப்பட்ட 2 பேரில் ஒருவர் சீக்கிய பக்தர். மற்றொருவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அகமது என்ற பாதுகாவலர் ஆவார் என்றார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

‘டீ குடிப்பதை கம்மி பண்ணுங்க’ – அமைச்சர் திடீர் அட்வைஸ்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், குருத்வாரா கர்தே பர்வானில் நடந்த கோழைத்தன தாக்குதல் அனைத்து வகையிலும் கடுமையான கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் செய்தி அறிந்த பின், நிலைமையை பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த சமூக மக்கள் நலமுடன் வர வேண்டும் என்பதே எங்களுடைய முதன்மையான கவலையாக உள்ளது என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.