#சென்னை || பலே வேலை செய்த லட்சுமி, கனகவள்ளி, மாரியம்மாள்.! பிளைட் ஏறும் முன்பே தட்டி தூக்கிய அதிகாரிகள்.! 

இன்று சென்னை விமான நிலையத்தில் 34.76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு இன்று கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் தீவிர சோதனையில் இறங்கினர்.

இதில், சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு செல்ல இருந்த, திருச்சியைச் சேர்ந்த லட்சுமி கந்தசாமி, கனகவள்ளி சுப்பிரமணி, திண்டுக்கல்லைச் சேர்ந்த மாரியம்மாள் சுடலைமுத்து ஆகிய மூன்று பெண் பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த மூன்று பயணிகளும் தங்களது உடலில் தலா 100 டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் (அமெரிக்க டாலர்) மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

உடனடியாக அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மதிப்பு இந்திய ரூபாய் 34.76 லட்சம் ரூபாய் என்று தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அந்த நபர்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.