தன்னையே அர்ப்பணித்த தந்தையை போற்றுவோம்: தந்தையர் தினம்| Dinamalar

அமெரிக்காவில் 1909ல் வாஷிங்டனின் ‘சொனாரா லுாயிஸ்’ என்ற இளம்பெண், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய், தன் ஆறாவது பிரசவத்தின் போது மரணமடைந்தார். தந்தை வில்லியம், ஆறு குழந்தைகளை சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இதுதான் இத்தினத்தை கொண்டாடும் எண்ணத்தை அவருக்கு துாண்டியது. இதையடுத்து தந்தையின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 19) உலக தந்தையர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

இந்தியா உள்பட 52 நாடுகளில் இதே தேதியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை. குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த தந்தையர்களுக்கும், குடும்பத்துக்காக கடைசி வரை உழைக்கும் அன்பு நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.