நெல்லையில் பட்டா வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.!

நெல்லை மாவட்டம் பணகுடியில், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

துரைகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் தங்களது நிலத்திற்கு பட்டா கோரி, பணகுடி வருவாய் ஆய்வாளரான ஜான்சிராணி என்பவரை அணுகினர்.

அவர்களிடம் ஜான்சிராணி தலா 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முன்பணமாக அந்த பெண்கள் ஜான்சி ராணியிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அங்கிருந்த ஒரு பெண் விடியோ எடுத்து வெளியிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணியை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.