பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மன உளைச்சலில் நகை மதிப்பீட்டாளர் தூக்கிட்டு தற்கொலை.!

சேலம் அருகே மனைவியிடம் பணம், நகைகளை வாங்கிக் கொண்டு சிலர் ஏமாற்றியதால் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மன உளைச்சலில் நகை மதிப்பீட்டாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

மோகன் தாஸ் என்ற அந்த நபர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மேரி, அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி, சுபா ஆகியோருக்கு ஆதாரம் ஏதுமின்றி பணம், நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மோகன் தாஸ் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் தர மறுத்ததாகவும், போலீசில் புகாரளித்த போது அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய நபர் சாந்தி, சுபாவுக்கு சாதகமாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் பணத்தை ஏமாற்றியதால் தனது மகள், மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை எனக்கூறி மோகன் தாஸ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.