மது அருந்த பணம் தர மறுத்த தொழிலதிபர் மீது தாக்குதல்.. இளைஞர்கள்

மது அருந்த பணம் தராததால் தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சரல்விளை பகுதியை சேர்ந்தவர் சேகர். வெளிநாட்டில் இருந்த இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை கடைதெருவிற்கு சென்ற அவராய் மது போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் வழிமறித்தனர்.

அப்போது, அவரிடம் மது அருந்த பணம் கேட்டு தகராற்றில் ஈடுப்பட்டுள்ளனர்.  அவரை தாக்கி அவரிடம் இருந்து பணம் பறிக்க முயன்றுள்ளனர். ஆனாலும் ஆத்திரம் குறையாத அவர்கள் அவரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த  வாகங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நான்கு இளைஞர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.