எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி இலங்கையில் அலுவலகங்கள் மூடல்| Dinamalar

கொழும்பு:பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அடுத்த வாரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.இங்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது.நம் நாட்டில் இருந்து அரிசி, மருந்துகள், மீனவர்களுக்காக டீசல் அனுப்பி உதவப்பட்டு வருகிறது. இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் தினமும் 13 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அடுத்த வாரம் மூடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக வாகன போக்குவரத்து குறையும் என இலங்கை அரசு நம்புகிறது.

விவசாயம் செய்யும் ராணுவம்

உணவுப் பொருள் உற்பத்தியை பெருக்க, இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தரிசாககிடக்கும் அரசு நிலத்தில், ராணுவ வீரர்கள்விவசாய பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.