ஒடிசா || திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றுகிறார் எம்.எல். ஏ மீது இளம்பெண் புகார்..!

திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக எம்.எல்.ஏ மீது இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் திர்டோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிஜய் சங்கர் தாஸ். இவர் இளம்பெண் ஒருவடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், மே 17-ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொள்ள முன் பதிவு வைத்துள்ளனர்.

ஆனால், பதிவாளர் அலுவலகத்திற்கு மணகோலத்தில் வந்துள்ளார். ஆனால், பிஜயை வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், திருமணம் செய்து கொள்ளவதாக கூறிவிட்டு ஏமாற்றியதாக எம்.எல்.ஏ பிஜய் சங்கர் தாஸ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், எம்.எல்.ஏவின் குடும்பத்தினர் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ தெரிவிக்கையில், பதிவுத்திருமணம் செய்துகொள்ள இன்னும் 60 நாட்கள் உள்ளன. திருமணத்தை நிறுத்த முயற்சிக்கவில்லை என அவர் தெரிவித்தார். பதிவுதிருமணம் தொடர்பாக மணப்பெண்ணோ அவரின் குடும்பத்தினரோ என்னிடம் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.