ஒரே நேரத்தில் 14,299 வீரர், வீராங்கனைகள் குத்துச் சண்டை பயிற்சி.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிகழ்வு..!

ஒரே நேரத்தில் 14 ஆயிரத்து 299 வீரர், வீராங்கனைகளை கொண்டு குத்துச் சண்டை பயிற்சி நடத்தி மெக்சிகோ சிட்டி அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

மெக்சிகோ தலைநகரில் நடந்த நிகழ்வில் தேசியக் கொடியின் வர்ணங்களில் உடையணிந்த மக்கள், 30 நிமிடங்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இதற்கு முன் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகளை கொண்டு ரஷ்யா நிகழ்த்திய சாதனையை தற்போது மெக்சிகோ சிட்டி அரசு மற்றும் உலக குத்துச் சண்டை சம்மேளனம் இணைந்து முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.