கன்னட நடிகர் குத்திக் கொலை – போலீசார் தீவிர விசாரணை

கன்னட நடிகர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டள்ளனர்.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் சதீஷ் வஜ்ரா (36). இவர் ‘லகோரி’ என்ற கன்னட படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் பல்வேறு கன்னட படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

image

இந்நிலையில், சதீஷ் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பட்டனகெரே பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு சதீஷின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சதீஷிடம் தகராறு செய்து, அவரை பிடித்து சரமாரியாக தாக்கி, கத்தியால் சதீஷை சரமாரியாக குதியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சதீஷ் உயிருக்கு போராடினார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சதீஷ் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

image

இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.ஆர்.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கொலையான நடிகர் சதீஷ் ஒரு இளம்பெண்ணை காதலித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சதீஷின் மனைவி பாமீதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் சதீஷை அவரது மனைவியின் சகோதரர் கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாமீதாவின் சகோதரர்களான சுதர்சன் மற்றும் நாகேந்திரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.