'கழகத்தின் ஒற்றை தலைமையே' அரூரில் ஒட்டப்பட்டுள்ள ஒபிஎஸ் ஆதரவு போஸ்டர்

அரூரில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமையேற்க வா என ஒபிஎஸ்ஸை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் பொதுக்குழு கூட உள்ள நிலையில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிலர் ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும், சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதராவாக குரல் கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருவரையும் ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
image
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் சுற்று வட்டார பகுதிகளில், அதிமுக தொண்டர்கள் ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட தென்னாட்டு தலைமகனே, கழகத்தின் ஒற்றைத் தலைமையை ஏற்று கழகத்தை வழி நடத்த வாருங்கள் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகளில் எடப்பாடி பழனிசாமியின் படம் இடம் பெற்றுள்ளது. அதேபோல், தருமபுரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், ஏ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமார் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர்.
image
இந்நிலையில், அரூர் பகுதியில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள்  ஒட்டியுள்ள போஸ்டர்கள் பல இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.