சிறுவாணி அணை நீர் சேமிப்பு: பினராயி விஜயனுக்கு முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரித்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும். கேரள முதல் மந்திரி இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.