டயர் வெடித்து விபத்துக்குள்ளான கார் – உருண்டு செல்லும் பதைபதைக்கும் காட்சிகள்

திண்டுக்கல் அருகே கார் டயர் வெடித்து உருண்டு சென்று பள்ளத்திற்குள் விழும் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூரிலிருந்து நெல்லைக்கு மோகன் என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்றுக்கொண்டிருந்தார். பிரபு என்பவர் காரை ஓட்டினார். திண்டுக்கல் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் கார் சில அடிகள் உருண்டு கொண்டே சென்று அருகிலுள்ள உள்ள பள்ளத்தில் விழுந்தது.
image
இதில் மோகன், அவரது மனைவி, ஒரு குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. ஒரு குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஓட்டுநர் பிரபு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான நிலையில் பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.