#தமிழகம் || ஓட ஓட அரிவாளால் வெட்டு.., துண்டான கையை கையோடு எடுத்துச் சென்ற வாலிபர்கள்.! 

திருச்சி அருகே கூலித்தொழிலாளியின் இடது கையை துண்டாக்கி, அந்த துண்டாக்கப்பட்ட கையை வாலிபர்கள் எடுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு. 48 வயதாகும் இவர் கூலி தொழிலாளி தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ராமுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த விஜய், ஹரி என்ற 25 வயதான வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே ஹரி, விஜய் ஆகிய இருவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வரவே, அவர்கள் தற்போது தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை ஹரி மற்றும் விஜய் ஆகிய இருவரும் ராமுவிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் ராமுவின் கொலைசெய்யும் முயற்சியில் ஓட ஓட அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ராமுவின் இடது கை துண்டானது. துண்டான கையை அந்த இரண்டு வாலிபர்கள் கையோடு எடுத்துச் சென்றனர்.

படுகாயம் அடைந்த ராமுவை பார்த்த அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் மற்றும் ஹரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த கொலைமுயற்சி சம்பவத்திற்கு பின்னணியில் பணப்பிரச்சனை மட்டும்தான் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் சம்பவங்கள் நடந்து உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.