#தர்மபுரி || நிலைதடுமாறி இருசக்கர வாகனம் நெடுஞ்சாலை மைல் கல்லில் மோதி விபத்து.! இளைஞர் உயிரிழப்பு.!

தர்மபுரி மாவட்டத்தில் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் நெடுஞ்சாலை மைல் கல்லில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த முனியப்பனின் மகன் ஆனந்தன்(30). இவர் நேற்று தனது நண்பர்களான நவீன்குமார், அஜித்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் நாகாவதி அணைக்கு சென்றுள்ளனர்.

பின்பு அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நிலையில் தடங்கம் மேம்பாலத்தில் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி நெடுஞ்சாலை மைல் கல்லில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை காவல்துறையினர் காயமடைந்த மற்ற இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.